புழல் சிறை கைதி திடீர் சாவு

புழல்: மிசோராம் மாநிலத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் (எ) டான்கின்பா (40). இவர், கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தபோது கொளத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஆயுள் தண்டனை பெற்று புழல் தண்டனை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்த்தனர். அங்கு, உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: