சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னையில் நோய் தொற்றாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தினசரி காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை மற்றும் காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு மாநராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.