கொரோனா தடுப்பு நிதி மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்

சென்னை: கொ ரோனா தடுப்பு நிதியாக ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: இயற்கை பேரிடர் நிகழும்போது மக்களுக்கு தேவையான உதவிகளை மெட்ரோ ரயில்வேயில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து தற்போது, கொரோனா பரவலை எதிர்கொள்ள தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை தந்து வருகின்றனர். அந்தவகையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சார்பாக கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் அனைத்து வகையிலும் அரசுக்கு உதவியாக இருப்பார்கள்.இவ்வாறு கூறினர்.

Related Stories: