சென்னை: கொ ரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புனிதவெள்ளி வழிபாடுகள் ஆலயங்களில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் நடந்தன. புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி, இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் அவரது சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாளிலிருந்து தொடங்கி 40 நாட்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த காலத்தில் பெரும்பாலும் புலால் உணவை தவிர்ப்பது வழக்கம். இந்த 40 நாட்கள் நோன்புக்கு பிறகு புனித வெள்ளி கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான அன்று ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், சிலுவைப்பாதை வழிபாடும், திருச்சிலுவை ஆராதனையும் நடைபெறும்.