சென்னை: கேரளா அரசு சமூக இடைவெளிவிட்டு மீன்பிடிக்க அனுமதி அளித்தது போல் தமிழகத்திலும் மீன்பிடிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செலஸ்டின், அந்தோணி ஆகியோர் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர், மீன்வளத்துறை இயக்குநரிடம் கோரிக்கை மனுஅளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில்: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மீன்பிடித் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருக்கும் சிறுவியாபாரிகள், மீன்பதப்படுத்துவோர், கருவாடுவிற்பவர்கள், உள்நாட்டு மீனவர்கள் போன்றோர் வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.