திருவில்லிபுத்தூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த பஸ் நடத்துநர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து கிடந்த அரசு பஸ் நடத்துநரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் காமாட்சி(31). அரசு பஸ் நடத்துநராக பணியாற்றுகிறார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி காமாட்சியை போராடி மீட்டனர். மேலும் அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: