திருச்செங்கோடு: காற்றுடன் பெய்த மழையால் ஏற்பட்ட மின்தடையை மின்வெட்டு என பொய்யான தகவல் பரப்புகின்றனர் என திருச்செங்கோடு அருச மருத்துவமனையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார். தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார். மின்வாரிய ஊழியர்களின் பணியை களங்கப்படுத்தும் வகையில் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என பதில் தெரிவித்தார்.