இணையத்தில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே பழங்கள், காய்கறிகள் வரும்

சென்னை: கொரோனாவால் தமிழக மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் சூழலில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, https://ethottam.com என்ற இணையதளத்தை தோட்டக்கலைத்துறை தொடங்கி உள்ளது. இதில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களின் அளவை குறிப்பிட்டு ஆர்டர் செய்தால் நேரடியாக இல்லத்திற்கே வந்து சேரும்.   ரூ.500, ரூ.600, ரூ.800 என மூன்று வகையில் பழங்களை தொகுப்பாகவும், காய்கறிகளை பொறுத்தவரை ரூ.300, ரூ.500, ரூ.600 என மூன்று தொகுப்பாகவும் பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்டமாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

Related Stories: