தமிழக அரசு உத்தரவு மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணை: நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று, தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல்வர் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததும் புதிய மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தொடங்கும்.

Related Stories: