சென்னை: ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், பல்வேறு மாநிலங்களில் கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களின் கடனுக்கான தொகையை ஆண்டுதோறும் செலுத்தி வருகிறார். இதுபோல் பல்வேறு நல உதவிகளை திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் அவர் வழங்குகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 15 நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால் சினிமா தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் உதவி புரிந்து வருகிறார்கள். நடிகர் சல்மான் கான், தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் செலுத்தியுள்ளார்.