கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் அமிதாப், ரஜினி, சிரஞ்சீவி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி இணைந்து நடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வு தரும் வகையில் பேமிலி என்ற பெயரில் குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பிரசூன் பாண்டே இயக்கியுள்ளார். ஊரடங்கு சமயத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனை பேணுவது, சமூக இடைவெளி கடைபிடித்தல், அவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பது, முகக் கவசம் அணிவது, நோய் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வது உள்பட கொரோனா விழிப்புணர்வு விஷயங்களை தொகுத்து இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, ரன்பீர் கபூர், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அலியா பட் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த குறும்படம் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாபும் ரஜினியும் சேர்ந்து நடித்துள்ளனர்.  இந்த குறும்படத்தை தொலைக்காட்சி, யுடியூப், பிற இணையதள சேவைகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

Related Stories: