சென்னை: ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் பல நாடுகளுக்குகிடையே நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால் நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.