திருப்பதி: ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. வைரசின் தாக்கம் வேகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆந்திராவில் நேற்றைய நிலவரப்படி 226 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா வைரசுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 28 பேரும், அனந்தப்பூர் மாவட்டத்தில் 3, சித்தூரில் 17, கிழக்கு கோதாவரியில் 11, குண்டூரில் 30, கர்னூலில் 27, கடப்பாவில் 23 , பிரகாசம் மாவட்டத்தில் 23, விசாகப்பட்டினத்தில் 15, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 15, நெல்லூரில் 34 உட்பட மொத்தம் 226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.