சென்னை: கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 101 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக போலீசாருக்கு 33 நாட்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் உணவுப்படியாக 8250 ரூபாய் வழங்க ஆணையிட்டுள்ளது அதற்காக 75.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்யாவசியப்பணிகளை மேற்கொண்டுவரும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் 35 ஆயிரம் பணியாளர்களுக்கு மாஸ்க், கிருமிநாசினி வாங்க 1.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.