சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 டீன்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பணியிடங்களில் புதிதாக 3 டீன்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 3 டீன்கள் ஓய்வு பெற்றனர். அந்த பணியிடங்களில் புதிதாக 3 பேரை நியமிக்க வேண்டும் என்று, மருத்துவக் கல்வி இயக்குநர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். அவரது கருத்துருவை ஏற்ற அரசு, பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை அரசு செயலாளர் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த பணியிடத்தில் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியின் மகளிர் நோயியல் துறையின் பேராசிரியர் எம்.பூவதி நியமிக்கப்படுகிறார்.