திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதித்தவர் வசித்த சிங்காரவேலன் நகரில் 13 சாலைகளுக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் கொரோனா பாதித்தவர் வசித்த சிங்காரவேலன் நகரில் 13 சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 13 சாலைகளிலும் வசிக்கும் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்காரவேலன் நகரின் 13 நுழைவுப் பாதைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் சிங்காரவேலன் நகர் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: