சென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை, எளிய குடும்பங்களில் உள்ள குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மொத்த மாணவர் சேர்க்கையில் 25 சதவீதம் இவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மே மாத இறுதியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.