சென்னை: கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, பல தனிமைப்படுத்தல் பிரிவுகளை அமைத்து வருகிறது. ரயில் பெட்டிகள் கொரோனா தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் மட்டும் போதுமானதல்ல. தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. இவற்றை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம் 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த முடியும்.
தற்காலிக கொரோனா வார்டுகளாக தனியார் கல்லூரிகள், மாணவர் விடுதிகளை மாற்றுவது குறித்து பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
- தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளின் மாற்றம்
- கல்லூரிகள்
- கொரோனா வார்டுகள்
- மாணவர் விடுதிகள்
- தமிழ்நாடு அரசு