சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தந்த ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் கடிதம் வந்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதத்தில் அரசு பணியாளர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.