சென்னை: கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை ரேஷன் கடைகளில் கேரளாவை போல் கார்டு வரிசை எண் அடிப்படையில் வீடுகளில் நேரடியாக வழங்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க நூலகர் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊரடங்கை ஒட்டி குடும்ப அட்டைக்கு தலா 1000 மற்றும் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொருட்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடினால் சமூக விலகலும் கேள்விக்குறியாகிவிடும்.