திருப்போரூர்: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, இந்து அறநிலையத் துறை உத்தரவின்பேரில் நேற்று திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு கோயில்களிலும் கடந்த சில நாட்களாக சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.