சென்னை: நாடு முழுவதும் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாறும் பணி தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில் மொத்தம் 273 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றை 2 மாடல்களில் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கொரோனா வேகமாக பரவியபோது, அங்கு தற்காலிக மருத்துவமனைகளை சீனா அவசர அவசரமாக கட்டியது. இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு அலுவலக கட்டிடங்கள், தனியார் கல்லூரி கட்டிடங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது.