மாத இறுதியில் சிபிஎஸ்இ தேர்வுகள்

சென்னை:  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.   ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல, பணிகள் தொடங்கிய பிறகு தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இயை பொறுத்தவரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகுதான் ஆலோசிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதில் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் தேர்வு நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: