தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது வரை 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு : மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு தொடர்பாக கேட்டறிந்தார். தமிழகத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இதற்காக தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதி அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: