சென்னை: ரேஷன் கடை விற்பனையாளர்கள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ₹1000 நிவாரணத்தொகை மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அறிவித்தது. இது ரேஷன் கடை பணியாளர்களின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் ரேஷன் கடையை நோக்கி படையெடுப்பார்கள். இலவசத்துக்காக ஒட்டு மொத்த மக்களும் ரேஷன் கடையை முற்றுகையிடுவார்கள். ரேஷன் கடைக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டம் கட்டி நிற்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்கு முன்னதாக டோக்கன் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.