திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் சுகாதார மாவட்ட 24 மணி நேர அவசர கட்டுப்பாடு அறையினை நேரில் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர். அரசு அலுவலக வளாகத்தில் கிருமிநாசினிகளை அமைச்சர் பா.பெஞ்சமின் தெளித்தார்.