போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?...மருத்துவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்: கமல்ஹாசன்

சென்னை: போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும். மேலும் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் இதன் தீவிம் பற்றி மக்கள் பலர் புரிந்து கொள்ளாமல் உள்ளனர் என, மருத்துவர்கள் மற்றும் பல பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழகத்தில் மேலும் 17 பேர் கொரோனா  17 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதன் மூலம் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 67 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவி வருவதை தடுக்கும் விதமாக தன்னை தானே, கடந்த இரண்டு வாரமாக தனிமை படுத்திக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும், தொண்டர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என மருத்துவர்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது; போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

Related Stories: