சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் 19,120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், 300 சதவீதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ெபாதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். குறிப்பாக, சென்னையில் 19,120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள், வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு, இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.