லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய ராதிகா ஆப்தேவுக்கு கொரோனாவா?

சென்னை: இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும், ஏராளமான குறும்படங்களிலும் நடித்தவர் ராதிகா ஆப்தே. சில குறும்படங்களில் டாப்லெஸ் ஆகவும், நிர்வாண காட்சிகளிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் லண்டனை சேர்ந்தவர். அங்கேயே வசித்து வருகிறார். இதனால் அடிக்கடி லண்டன் சென்று வரும் அவர், சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் இருந்த சில அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். ‘லண்டன் சென்று வந்ததால், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று அவர்கள் ராதிகா ஆப்தேவிடம் சொன்னார்கள்.

 உடனே அதற்கு சம்மதித்த அவர், கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைகள் செய்துகொண்டார். பிறகு இரண்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்ட அவர், மருத்துவமனையில் தனி அறையில் தங்க ஒப்புக்கொண்டார். ஆஸ்பத்திரியில் மாஸ்க் அணிந்து அமர்ந்திருக்கும் தனது போட்டோவை வெளியிட்ட ராதிகா ஆப்தே, தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், ‘எல்லோரும் பாதுகாப்பாக, வீட்டில் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு  இருங்கள்’ என்று அட்வைஸ் செய்துள்ளார்

Related Stories: