துரைப்பாக்கம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஜெட் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதார துறையினர் நேற்று தொடங்கி வைத்தனர்.
அப்போது, டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: சுகாதார துறை சார்பில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டு, தினசரி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார பணி நடைபெற்று வருகிறது. 31 மாவட்டங்களில் 557 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. பிப்ரவரி 15ம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த அனைவரையும் தீவிரமாக கண்காணித்து, அறிகுறிகள் தென்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி பராமரித்து வருகிறோம்.