சென்னையில் சிகிச்சை பெற்ற மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் சிறப்பு வார்டுகள் அமைப்பது குறித்து தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர், ஏற்கனவே குணமடைந்து வீட்டுக்குச் சென்று விட்டனர். நேற்று மாலை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த மேலும் 2 பேர் குணமடைந்து, வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories: