சென்னை: புனேவை சேர்ந்தவர் கெவல் பக்டி (62), தொழிலதிபர். இவர், கிட்னி சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் ஓரளவு குணமடைந்துள்ளார். ஆனாலும் புனேவில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், கெவல் பக்டி, புனே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறையின் அனுமதி பெற்று கொண்டு கெவல் பக்டியை, தனி சிறப்பு விமானத்தில் புனே அழைத்து செல்வதற்கு, அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.