தோட்ட வேலையில் ஈடுபடும் சிரஞ்சீவி

சென்னை: கொரோ னா வைரஸ் பர வலால் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. வேலை இல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியுள்ள நடிகர், நடிகைகளில் பலர் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்துள்ளனர்.  தெலுங்கில் ஆச்சார்யா படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பே படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். ஐதராபாத் வீட்டில் தங்கியுள்ள அவர், கிடைத்த நேரத்தில் தனது சமூக வலைத்தளங்களில் கருத்துகள் மற்றும் போட்டோக்களை பதிவிடுகிறார். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறார். பிறகு தோட்டத்துக்கு சென்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். புதிய செடிகளை நட்டு, அதன் வளர்ச்சியை கவனித்து வருகிறார்.

Related Stories: