வேலையின்றி பசியால் தவித்த திருநங்கைகளுக்கு உதவிய மஞ்சு வாரியர்

சென்னை: தமிழில் தனுஷ் ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்தவர் மலையாள முன்னணி நடிகை மஞ்சு வாரியர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மலையாள படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இல்லாமல் தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கினார் மஞ்சு வாரியர்.  இந்நிலையில், 50 திருநங்கைகள் வேலையின்றி பசியால் தவித்த தகவலை அறிந்த அவர், திருநங்கைகளின் பசியைப் போக்க 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்.  இதுகுறித்து உதவியாளர் கூறுகையில், போனில் தகவல் சொன்னேன். உடனே மஞ்சு வாரியர் உதவினார் என்றார்

Related Stories: