சென்னை: முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமாகா சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நிவாரணத்துக்கு நன்கொடை தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதை தமாகா சார்பில் வரவேற்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமாகா சார்பில் ₹10லட்சம் அனுப்பப்படுகிறது.