சென்னை: வீடுகளில் தவித்து வரும் கிட்னி சம்பந்தப்பட்ட நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற 102ஐ தொடர்பு கொண்டு வாகன வசதியை பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கத்தால் நாடே முடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம்தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவசிய தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் ஏராளமான டாயாலிசிஸ் நோயாளிகள் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடிய டயாலிசிஸ் சிகிச்சையை எடுத்தாக வேண்டும்.