தாம்பரம்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், சந்தோஷபுரம், அகரம்தென், மாடம்பாக்கம், சேலையூர், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, சானடோரியம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதி மக்கள் தாம்பரம் மார்க்கெட்டுக்கு வந்து, காய்கறி வாங்கி சென்றனர். இங்கு, அதிகப்படியான கூட்டம் கூடுவதால், நோய் பரவல் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தாம்பரம் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் செயல்படவில்லை.