சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலகினர், தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர். பெரும்பாலான நடிகைகள் வெளியே ஜிம்முக்கு சென்று வர முடியாத காரணத்தால், வீட்டு மொட்டை மாடியில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து வருகின்றனர். நடிகை சஞ்சிதா ஷெட்டி, துடைப்பம் வைத்து வீடு முழுக்க துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன், வீட்டில் தன் அம்மாவுக்கு உதவியாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பணியாளர்கள் வராததால், சமையல் செய்த பாத்திரங்களை கழுவி, அவற்றை அலமாரியில் அடுக்கி வைப்பதை வீடியோவாக்கி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.