சென்னை: எழும்பூரில் சுற்றி திரிந்த ஜப்பான் நாட்டு முதியவரால் கொரோனா பீதி ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவரை பிடித்து தனிமைப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை சென்னை எழும்பூர் தனியார் திரையரங்கம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் சாலையில் சுற்றி வந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களில் சிலர் கொரோனா ெதாற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில்அலறி அடித்து ஓடினர். இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வெளிநாட்டு வாலிபரிடம் 5 அடி தொலைவிலேயே நின்றபடி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சடோரோ சொமாயா (65) என்பதும், கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்துள்ளார்.