கோவை: கோவை மத்திய சிறையில் முக கவசம் தயாரிக்கும் பணியில் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, வசிப்பிடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவது உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முக கவசத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழிற் கூடங்கள் மூலமாக மாஸ்க் தயாரிக்கப்பட்டு ரூ.10 முதல் 20 வரை கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.