தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் உதவி

சென்னை: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இந்தியா முழுவதும் சினிமா மற்றும் டி.வி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்ேமளனம் என்ற பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அவர்களது பட்டினிச் சாவை தடுத்து நிறுத்த திரையுலகினர் உதவ வேண்டும் என்றும் பெப்சி தலைவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். மேலும் சிவகுமார், சூர்யா, கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் மற்றும் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர் தலா 10 லட்ச ரூபாய், இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், ஹரீஷ் கல்யாண் தலா ஒரு லட்ச ரூபாய் பெப்சிக்கு வழங்கினர். தயாரிப்பாளர் எஸ்.தாணு 250, பார்த்திபன் 250, பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகள் வழங்கினர். மேலும் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்து வருகின்றனர்.

Related Stories: