முதல்வர் எடப்பாடி யுகாதி தின வாழ்த்து

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி `யுகாதி தின’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது: `யுகாதி’ திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பேசும்மொழி வேறாய் இருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இரண்டற கலந்து, சகோதர, சகோதரிகளாய், அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.  

மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் வளமும், நலமும், வெற்றிகள் பலவும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: