கொரோனா தடுப்பு எதிரொலி: குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு எதிரொலி: குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். வருமானம் இழக்கும் நடைபாதை வியாபரிகளுக்கு ரூ.3,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சக்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறினார். 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: