அண்ணாநகர்: வில்லிவாக்கத்தில் தங்கியிருந்த காரைக்குடி வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சென்னை அரசு மருத்துவமனை உறுதி செய்துள்ளது. சென்னை வில்லிவாக்கம், தெற்கு ஜெகன்நாதன் நகர் 8வது குறுக்கு தெருவில் காரைக்குடியை சேர்ந்த 20 வயது வாலிபர் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கம் திரும்பிய இவர், கடுமையான காய்ச்சல், தலைவலி, சளியால் அவதிப்பட்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாமோ என்ற அச்சத்தில் நேற்று முன்தினம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.