சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பது குறித்து இன்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் பணியாற்றும் 90 சதவீத ஊழியர்கள் ரயில் மூலமாக பணிக்கு வருகின்றனர்.