சென்னை : கொரோனா தாக்கம் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் கள ஆய்வுக்கு நேரடியாக செல்லாமல் வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். கொரோனா பரவலை தடுக்க தினசரி பல்வேறு இடங்களில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்துவந்தார். நேற்று மக்கள் ஊரடங்கையொட்டி அவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அதற்கு பதிலாக வீட்டில் இருந்தபடியே அனைத்து துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு மேற்கொண்டார்.