சென்னை: தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் இருந்து திரும்பிய 64 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சென்னை ஸ்டாண்லி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார். துபாயில் இருந்து வந்த 43 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்முலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.