சென்னை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் வரும் 31ம் தேதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு வெப்ப அளவீடு சோதனை உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களும், ரயில் பெட்டிகளும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் மத்தியில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.