சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சில் வந்த விமான பயணிகளை மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தினர், அப்போது ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்ற 62 வயது பெண் சானடோரியத்தில் உள்ள சிறப்பு மருத்துவ பரிசோதனக்கு செல்லும்படி கூறினர். இதனால் அந்த பெண் பயணி ஆவேசமடைந்து கூச்சலிட்டபடி, ‘‘நான் என்ன கொரோனா நோயாளியா? நான் முழு ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆஸ்திரேலியாவில் மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு தான் விமானத்தில் ஏறினேன். பின்பு என்னை சிங்கப்பூரிலும் பரிசோதனை செய்தனர். அனைத்து இடத்திலும் நார்மல் என்று கூறிவிட்டனர்.