சென்னை: ‘கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்திக்கொள்வதே ஒரே வழி’ என, தமிழக பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து சென்னையில் பேரிடர் நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசும், தமிழக அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இன்று வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். மேலும் இன்று மருத்துவமனைகளுக்கு தினசரி மருத்துவ பரிசோதனைக்காக சென்று நர்ஸ், டாக்டர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் வதந்திகளை தடுக்க வேண்டும்.